தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மரணம் தமிழக மக்கள் மத்தியில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்து இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அவர் ஆசை ஆசையாய் வளர்த்த வெள்ளைக்கிளி அஞ்சலி செலுத்தியது. விஜயகாந்த் வளர்த்து வந்த வெள்ளைக்கிளி ஒன்று கேப்டன் கேப்டன் என அவரை வாய் நிறைய கூப்பிட்டதால் அதற்கு கேப்டன் என்று பெயர் வைத்து விட்டார். அவர் மறைந்ததால் அவருடைய உருவப்படத்தையே சுற்று சுற்றி வந்த கிளி திடீரென படத்தின் முன்பாக அமர்ந்து காண்போரை கண் கலங்க வைத்தது.