குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பின்புறத்தில் ஒரு தெரு நாயை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர். அதோடு அந்தக் காரை ஓட்டியவர் நாயை நடுரோட்டில் தரதரவனெ இழுத்துச் சென்றார். இப்படி கொடூரமாக நடுரோட்டில் கயிரால் கட்டி நாயை காரில் இழுத்துச் சென்றதால் நாய் இறந்ததாக கூறப்படுகிறது.

ஒரு வாயில்லா ஜீவனை கொடூரமாக கொன்றவர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.