இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். வழக்கமாக நிதி மோசடிகளில் ஈடுபடுவோர் கையில் எடுக்கும் 14 வழிமுறைகளை எஸ்பிஐ வங்கி வெளியிட்டிருக்கிறது.

* EB பில் கட்டுங்கள் * ஆன்லைன் ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது * வருமான வரி ரீபண்ட் தருகிறோம் * லாட்டரி விழுந்திருக்கிறது கஸ்டமர் கேரில் இருந்து பேசுகிறோம் * கிரெடிட் கார்ட் ரிவார்டு பாயிண்ட்ஸ் தருகிறோம் * யூடியூபில் லைக் செய்தால் பணம் உள்ளிட்ட முறைகளில் மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.