தமிழகத்தில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் 18 வயது நிரம்பியதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

வாக்காளர் உதவிக்கான மொபைல் செயலி மூலமாக தங்களது பெயர்களை சேர்க்க வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் நிலையில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்ற ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.