ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இன்றைய தேர்தலில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன.

இதில் வாக்காளர் அடையாளஅட்டை இல்லாவிட்டாலும் 12 அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். அவை, Aadhar, ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பணி அட்டை, Bank & Post Office Passbook, தொழிற் சங்க மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் அடையாள அட்டை, மக்கள் தொகை பதிவேட்டிற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு.