
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வறுமை பிடியில் உள்ள தம்பதியிடம் இருந்து, ஆண் குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு, அதனை சேலம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமான இந்த சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், நரசோதிப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா மற்றும் ஈரோடைச் சேர்ந்த ஜனார்த்தனன், பர்வீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், உதவி ஆணையரியின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த ஆண் குழந்தை, வறுமையால் தவித்த தம்பதியிடம் ஆசை வார்த்தை கூறி வாங்கப்பட்டு, பின்னர் சேலத்தில் அதிக விலையில் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பான குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழந்தை விற்பனை சம்பவத்தில், இன்னும் யாராவது தொடர்புடையவர்களா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமை, உணர்ச்சி மற்றும் நம்பிக்கையை துயரமாக பயன்படுத்தி குழந்தையை பெற்றுக் கொண்ட இந்தக் கூட்டத்தின் செயல்கள், மனிதாபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. சமூகத்தில் இத்தகைய குற்றங்களை முற்றிலும் ஒழிக்க, மேலும் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.