உத்திரபிரதேசத்தில் வறுத்த கோழிக்காக கணவன் மனைவியைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பிரேம்நகரைச் சேர்ந்தவர்கள் ஷாகித் உசேன் மற்றும் நூர் பானோ (46) தம்பதி. சம்பவத்தன்று, கோழி இறைச்சியை பொறித்துக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த உசேன் தனது மனைவி நூர் பானோவின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தியுள்ளார்.

இதனைத் தொடந்து உயிருக்குப் போராடிய மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மனைவியைக் கொன்ற சில மணி நேரங்களில் குற்றவாளியை கைது செய்தனர்.