
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் நபர் ஒருவர் சாலை ஓரத்தில் இருக்கும் வயல் வரத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு நாகப்பாம்பு அவர் மீது ஏற முயற்சிக்கிறது. சட்டென சுயநினைவுக்கு வந்த அந்த நபர் பதறி அடித்து உருண்டு தப்பித்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு அருகில் மற்றொரு பாம்பும் உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது உண்மை தன்மை குறித்து பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதாவது இவை ரீல்ஸ் போடுவதற்காக செய்யப்பட்டதா அல்லது நிஜத்தில் செய்யப்பட்டதா என கேள்வி எழுந்து வருகிறது. அதிலும் ஒரு சிலர் விஷம் இல்லாத இரண்டு பாம்புகளை வயிறு ஓரத்தில் கொண்டு வந்து விட்டு வேண்டுமென்று பாம்பை பார்த்தது போல ஆக்டிங் செய்திருக்கிறார்கள் என கூறி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க