ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் வழங்குவதாக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றிவிட்டார். அதாவது முதியோருக்கான ஓய்வுதியம் இரண்டாயிரத்தை படிப்படியாக 3000 ஆக உயர்த்துவேன் என்று வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது அது 3000 ஓய்வுதியம் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான்காயிரம் ஓய்வூதியம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். அதுபோக விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்குவதாகவும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்து கொடுப்பதாகவும் வாக்குறுதி வழங்கப்படுகிறது.