தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு பிறகு தற்போது முன்னணி இடத்தில் இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு என்றே சொல்லலாம். பல வருடங்களாக ஒரு சில பிரச்சினையால் சினிமாவுக்கு முட்டுக்கட்டை போட்ட வடிவேலு தற்போது மீண்டும் மாமன்னன் படத்தின் மூலமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில்  வடிவேலு தன் திரை வாழ்க்கையை அழித்துவிட்டதாக நடிகை பிரேமா பிரியா வேதனை தெரிவித்து உள்ளார்.

அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், திரையுலகில் என் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது வடிவேலு தான். பல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தாலும் அதையெல்லாம் தடுத்தார். வடிவேலுவுக்கு எதிராகப் பேசியதற்காக தன்னை ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க வைக்கவில்லை எனவும், மன்னிப்பும் கேட்க செய்ததாகவும் கூறியுள்ளார்.