தமிழ் சினிமாவில் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜன் தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வாணி போஜன், விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பணம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன். சினிமாவில் எந்த இடத்தையும் பிடிக்க நினைக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.