நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் பேட்டியளித்தபோது, தளபதி விஜய்யும் நானும் இணைவது பற்றி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவரும் என் படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, விஜய்யுடன் கண்டிப்பாக இணைவேன். அந்த நேரத்தில் நான் சொல்லும் கதை அவருக்கு பிடிக்க வேண்டும் என்றார். மேலும் வடசென்னை-2 படம் கண்டிப்பாக வரும். அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.