தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. பெல்லி சூப் திரைப்படத்தின் வாயிலாக ஹீரோவாக மாறிய இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதன் பிறகு கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ரசிகர் பாட்டாளத்தை திரட்டினார். தமிழில் நோட்டா படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தில் அவரோடு ஒன்றாக சேர்ந்து நடித்த ராஷ்மிகா உடன் ரகசிய உறவில் விஜய் தேவர கொண்டா இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா ஒரே வீட்டில் ஒன்றாக இருந்த புகைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடம் வசமாக சிக்கியுள்ளா.ர் மாலத்தீவு சென்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தின் மூலமாக சிக்கியுள்ளார். அதாவது இருவரும் சமூக வலைதளத்தில் தனித்தனியாக அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். இருப்பினும் பேக்ரவுண்ட் ஒரே மாதிரியாக இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது விஜய் தேவரகொண்டாவின் வீடு என்றும் இருவரும் லிவிங் டூகெதரில் இருக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.