நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது வரை விவசாயிகளுக்கு 15 தவணைப்பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 16 வது தவணை பணம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த உதவி தொகையை பெற விவசாயிகள் கட்டாயமாக கேஒய்சி முடித்திருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை முடிக்காத விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.