ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 700 புகார்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடு போனதாக பதிவு செய்யப்படுகிறது என்று சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட 24 மணி நேரத்தில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் தெரிவித்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்டு ஒப்படைக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கடந்த வருடத்தில் மட்டும் 233.6 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து திருடு போய் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போனால் உடனடியாக பொதுமக்கள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்க வேண்டும். 24 மணி நேரத்தில் புகார் அளித்து விட்டால் விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.