மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி அனல் பறக்க பேசினார். பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தியின் அனல் பறக்கும் பேச்சால் மக்களவை, திக்கு முக்கு ஆடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், மக்களவையில் உள்ள பாஜக பெண் எம்பிக்களுக்கு ராகுல் காந்தி பிளையிங் கிஸ் அளித்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ராகுல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகரிடம் மனுக் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில், அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.