கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிகாடு பகுதியில் வசித்து வரும் அருள் சகாய சேகர் (56), காஞ்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது எதிர்வீட்டில் வசித்து வந்த ததேயூஸ் (51) மற்றும் அவரது மனைவி ஜெய்னி (49). இவர்கள் பணம் தேவைப்படுகிறது. எனவே ஜெய்னி பெயரில் உள்ள 5 சென்ட் இடத்தை விற்பதாக கூறி, அருளிடம் 36 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆனால், அந்த இடத்தை எழுதி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், சொத்துக்கு உரிமை எழுதி தரப்படவில்லை. இதனால் ஏமாற்றப்பட்ட அருள் சகாய சேகர், தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், விற்பதாக கூறிய சொத்து ஏற்கனவே வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து, ததேயூஸ் மற்றும் ஜெய்னி எந்தவிதமான மீட்பு நடவடிக்கையும் எடுக்காமல், மோசடி நோக்கத்துடன் நடந்துகொண்டது உறுதியாகியதால், இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.