இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில் இருந்துள்ளார்.

சக மாணவிகள் கதவை உடைத்து பார்த்தப்போது அவர் ரத்த வெள்ளத்தில் இருந்ததாகவும், அருகே ஒரு 6 மாத பச்சிளம் குழந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. வீடியோ பார்த்து கருக்கலைப்பு செய்ய முயற்சித்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் மாணவி உயிரிழந்துவிட்டார். அப்பெண்ணுக்கு கார் ஓட்டுநருடன் தொடர்பு இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.