நடுரோட்டில் தனியாக நிற்கும் பெண்களுக்கு உதவி செய்ய நினைக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரங்கேறிய அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாகத் தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு இளம்பெண் நள்ளிரவில் தனியாக வீதி ஓரமாக நின்று, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரிடம் தனக்கு அவசரமாக வீடு செல்ல வேண்டும் என நைசாகப் பேசி லிப்ட் கேட்டுள்ளார். அந்த வாலிபரும் மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்ற முயன்றபோது, அந்த இளம்பெண் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த வாலிபரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை நைசாகத் திருடியுள்ளார்.
Jaipur, Rajasthan
A girl asked for a lift from a guy. Then she stole his phone.
When he caught her, she started abusing him and accusing him of harassment.
Just a few years back, many simps would have beaten him and supported the girl. pic.twitter.com/nj7Me9xgSV
— ︎ ︎venom (@venom1s) June 3, 2026
ஆனால், அந்தப் பெண் திருடியதை உடனடியாகக் கண்டுபிடித்த அந்த உஷாரான வாலிபர், இளம்பெண்ணின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “இவள் என்னிடம் லிப்ட் கேட்டுவிட்டு என் போனைத் திருடிவிட்டாள், பாருங்கள்” என்று தனது மற்றொரு கையில் திருடப்பட்ட போனை காட்டியபடி சுற்றியிருந்தவர்களிடம் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், மாட்டிய பிறகும் அந்த வாலிபரை அசிங்கமாகத் திட்டியதுடன், தன்னை அவர் துன்புறுத்துவதாகக் கூறி அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாட முயன்றுள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் @venom1s என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இப்போதெல்லாம் ரோட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு உதவி செய்யவே பயமாக இருக்கிறது” என்றும், வாலிபரின் உஷாரான புத்திசாலித்தனத்தைப் பாராட்டியும் தங்களது கருத்துக்களை இணையத்தில் காரசாரமாகப் பதிவு செய்து வருகின்றனர்.
