பாஜக அரசால் மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் , புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறினார். I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் கம்பீரமாக நடை போடும் என்று கூறிய அவர் அதிகாரத்தை கைப்பற்ற பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று தெரிவித்தார்.