தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் நடிகை மஞ்சு வாரியாரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.

மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் தமிழில் தனுசுடன் அசுரன், அஜித்துடன் துணிவு படங்களிலும் மஞ்சு வாரியார் நடித்துள்ளார். திருச்சியில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். கார் முழுவதையும் சோதனை செய்த பிறகு அவர் செல்ல அனுமதிக்கப்பட்டது.