ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது இன்றுடன் நிறைவு பெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியதுபோக மீதம் உள்ள கரும்புகளை ரூ.24க்கு விற்பனை செய்ய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது எந்த வகையில் நியாயம்?. ரேஷன் கடை பணியாளர்களை மன உளைச்சலில் சிக்க வைக்க வேண்டாம். தமிழக அரசு இந்த அறிக்கையை உடனே திரும்ப பெறவேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.