ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும். அதே போன்று இந்த வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரை இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டோக்கன் பெறாத குடும்ப  அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற இன்றே கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை உள்ளதால் இன்றுடன் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நிறைவடைகிறது.