இந்தியாவில் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் பல மாநில அரசுகள் ரேஷன் கடையில் மூலம் மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநில அரசு 1.67 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு உணவு பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த உணவுத் தொகுப்பில் 100 ரூபாய்க்கு வழங்கப்படும் எனவும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு, தட்டையான அரிசி மற்றும் ரவை, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களையும் வழங்க உள்ளது. இந்த பரிசு பெட்டி அந்தியோதயா உணவுத் திட்டம், முன்னுரிமை குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள், ஆரஞ்சு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள் உட்பட மொத்தம் 1.67 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.