இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து கடந்த வாரம் ஆலோசிக்கப்பட்டபோது அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் குறித்த புதிய ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கி வரும் மானிய விலையிலான சர்க்கரை திட்டத்தை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு கிலோ சர்க்கரை 18.50 என்ற விலையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.