தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849 ரூபாய் ஆகவும் காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.