நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற ஈபிஎஸ் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். 74 அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் ஓபிஎஸ் பக்கம் சென்று உள்ளனர். மற்ற 68 பேர் அதிமுகவில் தொடர்கின்றனர். இந்த நிலையில் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 117 பெயரை நியமிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.