தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரப்புரை கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ₹500 ரொக்கம், பெண்களுக்கு ₹500 ரொக்கம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுவும், விடுமுறை தினமான நேற்று இளைஞர்களை அதிகளவில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தியுள்ளன. அவர்களுக்கு ₹1000 வரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.