தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா யசோதா திரைப்படத்தை தொடர்ந்து சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை குணசேகர் இயக்க தேவ் மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பிறகு சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை அதிதி, மதுபாலா மற்றும் கௌதமி போன்ற பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சகுந்தலம் படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது நடிகை சமந்தா சாகுந்தலம் படத்திற்காக 3 கோடி மதிப்புள்ள நகையை அணிந்து கொண்டதோடு சுமார் 30 கிலோ எடையுள்ள உடையையும் அணிந்துள்ளாராம். மேலும் ஒரு கிலோ மதிப்புள்ள நகை மற்றும் 30 கிலோ எடையுள்ள ஆடை போன்றவற்றை அணிந்து கொண்டு 1 வார காலம் சூட்டிங் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சாகுந்தலம் படத்திற்காக நடிகை சமந்தா எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.