ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது தெரிந்ததே. இதன் காரணமாக நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடையும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என நிதி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 97 சதவீத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

மீதியை மக்கள் விரைவாக வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வரும் 30ஆம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுக்கள் செல்லா காசாக மாறிவிடும். இந்த நோட்டு தடையால் இனி ரூ.500 மட்டுமே உயர்ந்த தொகை கொண்ட ரூபாய் நோட்டாக இருக்கும்.