
மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும். இந்த அட்டையில் இரண்டு லட்சம் ரூபாய் இலவச விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்கள் திடீர் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த பணம் இலவசமாக வழங்கப்படும். ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு இணையதள இணைப்பு: https://pmjdy.gov.in/