பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான போட்டி ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11, 12 வகுப்புகளும் மாணவ மாணவிகளுக்கு எல்..ஆர். ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரைப்படி போட்டி தொடங்கும் முன் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் இடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் மூன்று மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அறிவிக்கப்படும். இந்த போட்டியில் முதல் பரிசு பத்தாயிரம், இரண்டாவது பரிசு 7000, மூன்றாவது பரிசு 5000 காசோலையாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.