தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இதனால் நிராகரிப்புக்கான காரணங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகின்றது. காரணம் சரியானதாக இல்லை என்றால் மேல் முறையீடு செய்யலாம் எனவும் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் மூலமாக கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.