பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கிவருகிறது. 8ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இதற்காக தேசிய திறனாய்வு தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதற்கான தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த உதவித்தொகை தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.