இந்தியாவில் வங்கி கணக்கை விட அதிக அளவு லாபம் தரக்கூடிய தபால் நிலையை சேமிப்பு திட்டங்கள் அதிகம் உள்ளன. அதனால் மக்களும் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வரும் நிலையில் போஸ்ட் ஆபீஸ் கிஷான் விகாஸ் பத்ரா திட்ட மூலம் முதலீட்டாளர்கள் இரட்டைப் லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் நீங்கள் முதலீடு செய்த தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாக கிடைக்கும்.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 10 லட்சம் முதலீடு செய்தால் 115 ஆவது மாதத்திற்கு பிறகு 20 லட்சம் ஆக கிடைக்கும். அதே சமயம் நீங்கள் விரும்பிய தொகையை முதலீடு செய்து அடுத்த 10 ஆண்டுக்கு முன்பாகவே இரட்டிப்பு லாபத்தை பெறலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து நீங்கள் பயன்பெற விரும்பினால் உடனடியாக அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸுக்கு சென்று பணத்தை முதலீடு செய்து லாபத்தை பெறுங்கள்.