கேரளா மாநிலத்தில் உள்ள ஆலுவா மாவட்டத்தில் 14 வயது சிறுமி காதலித்து வந்ததால் அவரது தந்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதுடைய சிறுமி தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் செல்போனில் நெடுநேரம் உரையாடி வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை தனது மகளை விஷம் குடிக்க வற்புறுத்தி வாயில் விஷம் ஊற்றி கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து, சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.