ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று காரியங்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக நடக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபட பாருங்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனம் வேண்டும். காரணம் இன்றி மற்றவர்கள் மீது கோபப்பட வேண்டாம்.

நிலுவையில் இருந்த பணம் சீராக வந்து கொண்டிருக்கும். இடத்திற்கு ஏற்றார் போல் மாறி கொள்வது நல்லது. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இறைவழிபாட்டில் கவனம் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

தைரியமாக சில பணிகளை மேற்கொள்வீர்கள். சிந்தித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். இன்று மாணவர்கள் பொறுப்பாக செயல்படுவீர்கள். கல்வி மீது அக்கறை இருக்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்