ராகுல் மீது மேலும் ஒரு வழக்கு வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. “சாவர்க்கர் 5-6 பேருடன் சேர்ந்து இஸ்லாமிய நபரை தாக்கினார் என ராகுல் பேசியுள்ளார். இது ஆதாரமற்ற கற்பனையான சம்பவம்” என சாவர்க்கர் பேரன் சாத்யகி ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராகுல் பேசிய வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். மோடி என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை, தகுதி நீக்கம் என சிக்கலில் உள்ள ராகுலுக்கு தற்போது புதிய பிரச்னை உருவாகியுள்ளது