ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாங்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த கிடங்கு தீப்பற்றி எரிந்ததாகவும் உக்கரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 6000 கன மீட்டர் கொள்ளளவு உடைய எண்ணெய் தொட்டிகள் நான்கு எரிந்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.