மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில்  பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வாரம் ஒருமுறை, மும்பை சிஎஸ்டி ரயில் முனையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மும்பையில் இருந்து மதியம் 1.15க்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11க்கு தூத்துக்குடிக்கு சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 3.40க்கு மும்பை சென்றடையும்