புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 2023 – 24 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்துவதால் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மாணவர்கள் 92%, 10ம் வகுப்பு தேர்வில் 91.05 %பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2023 – 2024ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.