ரயில்களில் பொதுப் பெட்டிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஸ்லீப்பர் பெட்டிகளை முன் பதிவு செய்யாத பொதுப் பெட்டிகளாக மாற்ற அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் வந்து புறப்படும் வரை கவுண்டரில் டிக்கெட் வழங்கப்படுவதால் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளில் கூட்ட நெரிசல் அலை மோதுகிறது.

இதனை தடுக்க அனைத்து வழித்தடங்களிலும் பயணியர் குறைவாக உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை முன் பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்றுவதற்கு ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில் பகல் நேர ரயில்களில் பயணியர் குறைவாக உள்ள முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கையை அழிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்லீப்பர் பெட்டிகளை முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்றுவதன் மூலம் பயணிகள் பயனடைவார்கள் எனவும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.