ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ப்ளே ஸ்டோரில் யூ டி எஸ் என்னும் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண சீட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகள் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் ரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவு முதல் 20 கிலோமீட்டர் வரை ரயில்  புறப்படுவதற்கு முன்பாக வீட்டில் இருந்தே பயண சீட்டு பதிவு செய்து கொள்ளலாம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லாத பயண சீட்டு என்பது நாம் பயண சீட்டு பதிவு செய்த மொபைல் போன் யூ டி எஸ் செயலில் “காண்க டிக்கெட்” என்னும் பகுதியில் உள்ள பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகர் இடம் காண்பித்துக் கொள்ளலாம். இந்த காகிதத்துடன் கூடிய டிக்கெட்டிற்கு பயண சீட்டு பதிவு செய்யும்போது வந்த மெசேஜ் அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பதிவு சீட்டு இயந்திரத்தில் பயண சீட்டு அச்சிட்டு கொள்ளலாம். மேலும் சிறு சிறு கடைகளில் வணிக நிறுவனங்களில் உள்ளது போல qr கோடு அனைத்து ரயில் நிலையங்களிலும் பயண சீட்டு அலுவலகம் அருகே  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கியூ ஆர்  கோடு  ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரயில் நிலையத்தில் பெயரை பதிவு செய்து மின்னணு வசதியின் மூலமாக பதிவு செய்து முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பயண சீட்டு பரிசோதகர் சோதனை செய்யும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை காண்பிக்காவிட்டால் உரிய அபராதம் விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை கடந்த 10 மாதங்களில் மொபைல் போன்கள் மூலம் 50.75 லட்சம் பயணம் சீட்டுகள் தெற்கு ரயில்வேயில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2.51 கோடி பயணிகள் கூட்டணியில் இல்லாமல் பயணச்சீட்டு பதிவு செய்து ரயில் பயணம் செய்துள்ளனர். மொபைல் போன் பதிவு மூலமாக பயண சீட்டு வருமானமாக ரூ.24.82 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.