பீகார், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சுவிதா விரைவு ரயில் அடிப்படைக் கட்டணம் 2950 என இருந்த நிலையில் பண்டிகை தினத்தை முன்னிட்டு 6,500 வரை வசூலிக்கப்படுவதாக புகார் இருந்துள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.