நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது.

ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு 45 முதல் 48 பைசா மட்டுமே வசூல் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து  கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி பாலகிருஷ்ணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘மூத்த குடிகளின் தேவை, நிதியை கவனத்தில் கொண்டு அரசுதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும்’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.