நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் வெடிகளை வாங்கி செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.