இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆப் மூலம் டாக்ஸி சேவை வழங்கும் வண்டிகளுக்கு டெல்லி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களின் பதிவு எண் கொண்ட வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே நகரக் கொள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் காற்று மாசுபாடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.