தயாள் பத்மநாபன் டைரக்டில் வர லட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கும் படம் “மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்”. இந்த படம் வருகிற 19-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இப்பட விழாவில் வரலட்சுமி, பேசியதாவது “இப்படத்தில் கண்டிப்பாக கதை இருக்கும். இக்கதையை கேட்கும்போதே த்ரில்லராக இருந்தது.

எங்களது திரைப்படத்தில் நல்ல கதை உள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி நான் ஒரு நடிகையாக எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். இதனிடையே வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கும் வில்லியாக நடிப்பேன்” என்று அவர் கூறினார்.