சமீபத்தில் பிச்சைக்காரன்-2 படபிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் ஆண்டனி குணமடைந்து டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “அன்பு இதயங்களே நான் 90 சதவீதம் குணமாகிவிட்டேன். உடைந்த எனது தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்து விட்டது.

வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன்-2 பட வேலைகளை மீண்டும் துவங்குகிறேன்” என குறிப்பிட்டிருந்தார். அதன்பின் பிச்சைக்காரன்-2 திரைப்படத்தின் முதல் 4 நிமிட காட்சி டிரெய்லராக வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. அந்த டிரெய்லரில் பணம் உலகை காலி செய்துவிடும் என்ற வரிகள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி தன் டுவிட்டர் பக்கத்தில், ”வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்க்கனும்.. நம்மைப் போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று குறிப்பிட்டு உள்ளார்.