நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நபர் ஒருவர் தனது இடது விரலை துண்டிக்க வேண்டுதல் செய்துள்ளார். உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சோனார் வாடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண் வர்ணேகர்  என்ற நபர் ஒருவர் தன்னுடைய விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது விரலை அறுத்துக் கொண்டு சுவரில் ரத்தத்தில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும் எழுதியுள்ளார். அதே சமயம் இவர் மோடிக்கு கோவில் கட்டி பூஜையும் செய்து வருகின்றார்